இஞ்சி

இஞ்சி மலைப் பிரதேசங்களில் அதிக மழை அளவு உள்ள இடங்களில் வளர்கிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. இஞ்சி வளர்வதற்கு மிதவெப்பமும், அதிககாற்று, ஈரத்தன்மையும் அவசியம். சாதாரணமாக 450 மீட்டர் முதல் 1800 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. வருடம் 150 செ.மீ மழைபொழியும் மலைப்பிரதேசங்களில் இஞ்சி சிறந்து வளர்கிறது. இஞ்சியிலிருந்து தயார் செய்யப்படும் காம்ஃபின், ஜின்ஜிபெரி, ஃபெளளாட்ரின் ஆகிய மருந்து பொருள்கள் உடலுக்கு தெம்பையும், புத்துணர்ச்சியும் தரக்கூடியவை. இது இஞ்சியிலிருந்துதான் தயார் செய்யப்படுகிறது நரம்பை பலப்படுத்தும் இஞ்சி இதயநோய் வராது தலைசுற்றல் வாந்தி மயக்கம் ஏற்படாது இதயத்தை பலப்படுத்தும் இஞ்சியை பொடி செய்து, டீ க்கு பதிலாக இஞ்சி டீ கூட குடிக்கலாம் என வெளிநாட்டு டாக்டர்கள் கூறியுள்ளனர். இப்போது இஞ்சியிலிருந்து சாறு, இஞ்சி சர்பத், லேகியம், இஞ்சி தைலம் ஆகிய மருந்துகள் செய்யப்படுகிறது. பசியை உண்டாக்கும் இஞ்சி சாறு இஞ்சியை மேல்தோல் நீக்கி அரைத்து, நீர் கலந்து வடிகட்டிப் பயன்படுத்துவதே இஞ்சிசாறு எனப்படும். உணவு செரிமானமில்லாமல் ஏற்படும் வயிற்று போக்கிற்கு இஞ்சி சாற்றை வயிற்றின் தொப்புள் பகுதியை சுற்றி தடவி வர குணமாகும். இஞ்சி சாறும், வெங்காய சாறும் சம எடை கலந்து குடித்தால், வாந்தி, குமட்டல் இவைகளை நிறுத்தலாம். இருமல் குணமாகும் இஞ்சி சாறு, மாதுளம் பழச்சாறு, தேன் சம அளவு கலந்து வேளைக்கு 30 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால், இருமல் விரைவில் குணமாகும். உடல் வலிமைக்கு இஞ்சி தேன் ஒரு காயகற்பம் இஞ்சியை கீற்றுக்களாக நறுக்கி, தேனில் ஊற வைத்து நாள்தோறும் காலையில் 4 துண்டு மாலை 4 துண்டு உண்டுவர உடல் பலம் பெறும். இளமை தோற்றம் கொடுக்கும். வயிற்று வலி, வாந்தி நீங்க இஞ்சி இஞ்சி சாறு, தேன் இரண்டையும் சேர்த்து பாகு செய்து குங்குமப் பூ, ஏலக்காய், சாதிக்காய், கிராம்பு இவற்றை பொடி செய்து தூவி, கிளறி எடுத்து கண்ணாடி பாத்திரத்தில் வைத்துக் கொண்டு தேவையான போது 5 கிராம் எடுத்து சாப்பிட வயிற்று வலி, வாந்தி முதலியவைகள் குணமடையும். உடல் நலம் காக்க இஞ்சி குடிநீர் இஞ்சி, திரிகடுகு (சுக்கு, மிளகு, திப்பிலி) ஏலம், அதிமதுரம், சீரகம், சந்தனத்தூள் ஆகியவை சுலபமாக மருந்து கடைகளில் கிடைக்கின்றன. எல்லாவற்றிலும் வகைக்கு சமஎடை அளவு வாங்கி, அரைத்து கலந்து வைத்துக் கொள்ளவும். வேண்டும்போது 1 ஸ்பூன் பொடியை நீரில் கலக்கி சுண்டக் காய்ச்சவும். பின்பு காலை மதியம் மாலை 50 மில்லி அளவு வேளைக்கு ஒருமுறை சாப்பிட பித்தம் நீங்கும். உடல் சுறுசுறுப்படையும். வாத நோய்களை குணமாக்கும் இஞ்சி எண்ணெய் இஞ்சி, சிவதை, சீந்தில், நிலவாகை, கொடிவேலி, கழற்சிக் கொடி, முடக்கத்தான், சமூலம், பூண்டு, சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து அரைத்து 500 மி.லி நெய்யில் கலக்கி காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு வேளைக்கு 1 ஸ்பூன் அளவு உள்ளுக்கு சாப்பிட்டு வர வாத நோய் குணமாகும். தலைவலிக்கு இஞ்சி இஞ்சி சாறு ஓரிரு சொட்டுக்கள் மூக்கில் துளியாக விட்டால் தலைவலி குணமாகிவிடும். பல்வலிக்கு இஞ்சி இஞ்சி துண்டை பல் வலியுள்ள இடத்தில் வைத்து தேய்த்தால் வலி மட்டுப்படும். தொந்தி குறைய இஞ்சி சாறும், தேனும் வயிற்றில் சதை அதிகமாவதால் தொந்தி விழுகிறது. அதை குறைத்தால் இதயநோய் வராது. தொந்தி இருக்கும் சிலருக்கு குறட்டை அதிகம் ஏற்படும். இதற்கு தொந்தி ஒரு முக்கிய காரணம். பெண்களுக்கு அதிகமாக இந்த வயிற்று சதை பிரச்சனை இருக்கிறது. குழந்தையின்மைக்கு ஒரு காரணமாக கருதப்படும் தொந்தியை குறைக்க இஞ்சி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் உண்டாகும்.

Comments